நெல்லை, தூத்துக்குடியில் பூகம்பம் வரும்: நிபுணர்கள்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பூகம்பம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தேசிய நில இயற்பியல்ஆய்வுக் கழக துணை இயக்குநர் கோட்டீஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.
நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநிடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
உலகில் எப்போதெல்லாம் பெரிய அளவில் பூகம்பங்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் இந்தப் பகுதிகளிலும் லேசானஅல்லது மிதமான நில நடுக்கங்கள் ஏற்படும்.
நெல்லையும், தூத்துக்குடியும் பூமித் தட்டின் பலவீனமான பகுதியில் அமைந்துள்ளதே இதற்குக் காரணம்.
சமீபத்தில் தூத்துக்குடியில் உணரப்பட்ட நல நடுக்கத்திற்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கமே காரணம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications