கடலில் கவிழ்ந்த படகு: உயிர் தப்பிய விவேக் ஓபராய்!
கடலூர்:
கடலூரில் நடுக்கடலில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயுடன் சென்ற ஒரு படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 30 பேர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் பல்வேறு உதவிகள் செய்துவருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்துள்ள இவர் படகுகளும் வழங்கி வருகிறார்.
சுனாமி குறித்து கேள்விப்பட்ட உடனேயே தனது படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கடலூர் மாவட்டத்திற்கு விரைந்து வந்தஇவர், அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்து உதவிகளை செய்தார்.
இந் நிலையில் நேற்று விவேக் ஓபராய் மீண்டும் தேவனாம்பட்டினத்திற்கு வந்தார். அவரது சார்பில் மீனவர்களுக்கு 4 படகுகள்வழங்கப்பட்டன. இதையொட்டி தேவனாம்பட்டினத்திலுள்ள திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதற்காக திரவுபதி அம்மன் சிலையை விவேக் ஓபராய், ரிஷிகேஷி சித்தானந்த சரஸ்வதி சாமிகள் மற்றும் பொதுமக்கள் தோளில்சுமந்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் விவேக் ஓபராய் வழங்கிய 4 படகுகளும் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது. ஒரு படகில் விவேக் ஓபராய்,சித்தானந்த சரஸ்வதி சுவாமிகள், கலெக்டர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பலர் சென்றனர்.
மற்ற 3 படகுகளில் மீனவர்கள், மேளம் வாசிப்பவர்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
திடீரென அந்தப் படகு நிலை தடுமாறி கடலில் கவிழந்தது. உடனே அப்படகில் இருந்தவர்கள் அலறினர். இதை கடற்கரையில்நின்று பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் விவேக் ஓபராய் சென்ற படகு கவிழ்ந்து விட்டது என்று கூறி கூச்சலிட்டனர்.
இதை தொடர்ந்து கடற்கரையில் இருந்தவர்கள் உடனடியாக படகுகளை எடுத்து கடலுக்குள் விரைந்தனர். ஆனால் அந்தப் படகில்இருந்த அனைவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
ஆனாலும் ஒருவர் மயக்கமடைந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்தவிவேக் ஓபராயும் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னர் கரைக்கு திரும்பிய பின்னர் விவேக்ஓபராய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.