ஜெயலலிதா Vs
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே அறிக்கை போர்தீவிரமாகியுள்ளது.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் அறிக்கையில் எனக்கு எதிராக அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஆட்சேபரகமானவை.இவற்றை எஸ்.ஆர்.பி. அவராகவே பேசினாரா, அல்லது முகத்தைக் காட்ட விரும்பாத ஒருவர் (கருணாநிதி) பின்னால் இருந்து கொண்டுஅவ்வாறு எஸ்ஆர்பியை பேச வைத்தாரா?
எஸ்.ஆர்.பியின் பேச்சு நிதானம் இழந்த ஒருவரின் வார்த்தைகளாக உள்ளன. அவர் நிலைதடுமாறிப் போயிருக்கிறார்.
நான் சாம்பலாக வேண்டும் என்று சாபம் கொடுக்கும் குழாய்ச் சண்டை கோமாளிகளுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.நான் பீனிக்ஸ் பறவை. நான் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவது சத்தியம்.
ஆனால், சட்டசபைக்கே வராமல் ஈசிசேரில் அமர்ந்து கொண்டு, கூட்டணிக் கட்சியினரின் குடும்ப டிவியில் மெகா சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் மகா பொய்யர்களாகிய அரசியல்வாதிகள் (எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள்) வீழ்ந்தால் வீழ்ந்தது தான்.
ஊதுகுழல்களுக்கு (எஸ்.ஆர்.பி) ஏது உரிமை?. மக்கள் எந்த இடத்தில் வைக்கிறார்களோ அந்த இடத்தில் இருக்க வேண்டியது தான் அதன்கடமை.
இவ்வாறு எஸ்.ஆர்.பியை போட்டு வாங்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு பதிலடி:
ஜெயலலிதாவால் காய்ச்சி எடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சும்மா இருப்பாரா?... விட்டார் ஒரு பதில் அறிக்கை. அதன் விவரம்:
ஜெயலலிதாவின் அறிக்கைகளைத் தயாரிக்க, சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருந்த ஒரு நபர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.மக்களோடும் மண்ணோடும் ஒட்டாத இந்த உரைகள் தான் ஜெயலலிதாவின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தன.
குழாயடிச் சண்டை கோமாளிகள், போக்கிரிகள், பொல்லாதவர்கள், சூழ்ச்சிக்காரர்கள், குறுமதியாளர்கள் ஆகிய தரம் தாழ்ந்த சொற்களை,தமிழ் மொழிக்கே இழிவு சேர்க்கும் இந்த வார்த்தைகளை தங்கத் தாரகை (சமீபத்தில் தங்கத் தாரகை விருது பெற்றார் ஜெ)பயன்படுத்தியிருக்கவே மாட்டார்.
அடுத்துக் கெடுப்பதும், சூழ்ச்சி வலைகள் பின்னுவதும், சுயநலத்தால் கோட்டை கட்டுவதும், ஏமாந்த காலத்தில் ஏற்றம் பெறுவதும்தங்களுடையே உடன்பிறந்த குணங்களாகக் கொண்டிருக்கும் மனிதர்களால் (சசி அண்ட் கோ??) தான் முதல்வர் ஜெயலலிதா தடம்புரள்கிறார்.
ஜெயலலிதா மீது கொண்டுள்ள உண்மையான அக்கறையின் காரணமாக சொல்கிறேன். அவருக்கு மிகச் சிறந்த மனநிலை மருத்துவ சிகிச்சைஅளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கை விட்டிருக்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.
இதற்கு போயஸ் கார்டனில் என்ன பதில் தயாராகிக் கொண்டிருக்கிறதோ?... பகவானே..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications