தர்மபுரி பஸ் எரிப்பு: டிரைவர் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 2வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இதில் கல்லூரி உதவி பொறியாளர், பஸ் டிரைவர்ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சேலம் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி நடந்தது. அப்போது கோவைவேளாண் பல்கலைக்கழக பேராசிரியைகள் அகிலா, லதா ஆகியோர் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் வாக்குமூலம்அளித்தனர்.

இவர்கள் இருவரும் நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க நீதிபதியிடம் கூறினர். மேலும் பஸ்ஸுக்கு தீவைத்த அதிமுகவினரையும்அவர்கள் அடையாளம் காட்டினர்.

பின் வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கிருஷ்ணராஜா, வழக்கு விசாரணை தொடர்ந்து 8,11,12மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த விசாரணைக்காக சாட்சிகள் 25 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதன்படி இன்று இரண்டாவது கட்ட விசாரணை தொடங்கியது. மாணவிகள் பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் கந்தசாமி, வேளாண்பல்கலைக்கழக உதவிப் பொறியாளர் ரவி, மாணவர்கள் பஸ்சை ஓட்டிச்சென்ற மஜித் உட்பட 5 பேர் இன்று ஆஜராக சம்மன்அனுப்பப்பட்டது.

இதில் முதல் சாட்சியாக கல்லூரி உதவி பொறியாளர் ரவி ஆஜராகி சாட்சியம் அளித்தார். பிறகு அவரிடம் எதிர்த் தரப்பு வவழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். இதன் பிறகு மாணவிகள் சென்ற பஸ்சின் டிரைவர் கந்தசாமி சாட்சியம் அளித்தார்.அடுத்தக் கட்ட விசாரணை 8ம் தேதி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+