கூடுதல் கமிஷனர்: புகைகிறது சென்னை காவல்துறை
சென்னை:
சென்னை மகாநகர் காவல்துறை கூடுதல் ஆணையர் நியமிக்கப்பட்டதற்கு சென்னை காவல்துறையில் அதிருப்தி நிலவுவதாககூறப்படுகிறது.
இந்த இணைப்பையடுத்து சென்னை மாநகர காவல்துறை, மகாநகர காவல்துறையாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.ஆணையருக்கு உதவியாக, கூடுதல் ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் முதல்வர் ஜெயலலிதா அப்போது அறிவித்தார்.
அதன்படி தற்போது கூடுதல் ஆணையராக, டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜி அந்தஸ்திலானது இந்த கூடுதல்ஆணையர் பதவி.
கூடுதல் ஆணையர் நியமிக்கப்பட்டிருப்பதை சென்னை காவல்துறை ஆணையர் நடராஜ் வரவேற்றுள்ளார். அதேபோல, வடசென்னை இணை ஆணையர் சைலேந்திர பாபுவும், கூடுதல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.
அதேசமயம், சென்னை காவல்துறையில் பெரும்பாலானோருக்கு கூடுதல் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டிருப்பதுஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இணைய தள குற்றங்களைக் கண்டுபிடிக்கும் தனிப் பிரிவு, மத்தியகுற்றப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள், கூடுதல் ஆணையர் பதவி தேவையற்றது என்று கூறியுள்ளனர்.
ஆணையர் நடராஜ் தலைமையில் சென்னை காவல்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. எந்தவித பிரச்சினையும் இல்லாமல்மிகவும் அருமையாக இயங்கி வருகிறோம். இந்த நிலையில் கூடுதல் ஆணையர் பதவி தேவையற்ற ஒன்று.
ஒரே காவல்துறைக்கு இரண்டு அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகாகள் இருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. பல்வேறுகுழப்பங்களையே இது ஏற்படுத்தும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நடராஜுக்கும், முதல்வருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்தும் விதத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறையில் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications