தொடர் மழை எதிரொலி: திமுக தஞ்சாவூர் மாநாடு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தஞ்சாவூரில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த திமுகமண்டல மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தஞ்சாவூரில் வரும் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்கள் திமுக மண்டல மாநாடு நடப்பதாக இருந்தது. இதற்கானஏற்பாடுகளும் வேகமாக நடந்து வந்தன.
ஆனால் தொடர் மழை காரணமாக மாநாட்டை திட்டமிட்டபடி நடத்துவதில் பிரச்சினை எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாநாட்டை ஒத்திவைத்துள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாநாடு நடைபெறும் என அக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சமீபத்தில் திண்டுகல்லில் திமுக மாநாடு நடந்தபோது கடைசி நாள் மழை காரணமாக வேக, வேகமாக நிகழ்ச்சிகள்முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications