போப் தேர்தல்: 18ம் தேதி தொடங்குகிறது
வாடிகன்:
புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18ம் தேதி தொடங்க இருப்பதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர்அறிவித்துள்ளார்.
இந் நிலையில் புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 18ம் தேதி தொடங்க இருப்பதாக வாடிகனின் செய்தித்தொடர்பாளர் ரோவால்ஸ் தெரிவித்துள்ளார்.
வாடிகனிலுள்ள சிஸ்டைசன் தேவாலயத்தில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 117 கர்தினால்கள் ஓட்டுப் போடுவார்கள்.அங்குள்ள ஒரு அறையில் கர்தினால்கள் கூடி ஒரு மனதாகவோ அல்லது ஓட்டு போட்டு மெஜாரிட்டி அடிப்படையிலோ புதியபோப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பார்கள்.
புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதும் புனித பீட்டர் தேவாலயத்தில் மணி அடிக்கப்படும். இந்த விதிமுறை இப்போது புதிதாகசேர்க்கப்பட்டுள்ளது.
புதிய போப்பை தேர்வு செய்வது தொடர்பாக கர்தினால்கள் வாடிகனல் ஆலோசனை செய்து வருகின்றனர்.
புஷ், கிளின்டன் நேரில் அஞ்சலி:
இதற்கிடையே போப் ஆண்டவரின் உடலுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது மனைவி லாரா புஷ் மற்றும் முன்னாள்அதிபர்கள் பில் கிளின்டன், ஹெச்.டபிள்யூ. புஷ் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி வாடிகன் நகர்முழவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications