மோசடி மன்னன் வரதராஜுலு மீது இன்னொரு வழக்கு
சென்னை:
ரூ. 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வரதராஜுலு மீது 3வதாக ஒரு வழக்கை சிபிஐ பதிவுசெய்துள்ளது.
எம்.வி.இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் இந்தியன் வங்கியிலிருந்து கடன் பெற்ற வழக்கில் கடந்த திங்கள்கிழமை அவர்சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று சத்யம் கெமிக்கல்ஸ், ஆண்டர்சன் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரில் ரூ. 5 கோடி மோசடிசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், பழங்குடியினர் கூட்டுறவு சங்கத்தில்முந்திரி வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மீறி ரூ. 11 கோடி அளவுக்கு கூட்டுறவு சங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில்கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் வரதராஜுலுவை வருகிற 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரவீந்திரன்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications