வேதாரண்யம் யாத்திரை: 13ம் தேதி நடைபயணம்
சென்னை:
மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் 1930ம் ஆண்டு நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹ யாத்திரையை நினைவுகூறும் வகையில் திருச்சியிலிருந்து ஏப்ரல் 13ம் தேதி நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அதேபோல, 1930ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, மூதறிஞர் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்கு சத்தியாக்கிரஹ யாத்திரைமேற்கொள்ளப்பட்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கப்பட்டது.
இதை நினைவு கூறும் வகையில், வருகிற 13ம் தேதி திருச்சியிலிருந்து தமிழக காங்கிரஸ் சார்பில் வேதாரண்யத்திற்கு நடைபயணம்மேற்கொள்ளப்படும். 17 நாள் யாத்திரைக்குப் பின்னர் 30ம் தேதி வேதாரண்யத்தில் நிறைவு விழா நடைபெறும். அதில், அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த யாத்திரையில், திரளான அளவில் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications