For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாநகராட்சி இடைத் தேர்தல்: மத்திய போலீஸ் பாதுகாப்பு கோருகிறது திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்த வேண்டும் என்று ஆளுனரிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் நடக்கும் இடைத் தேர்தல்களில் அமைச்சர்களே நேரடியாகக் களத்தில் குதித்து தேர்தல்வெற்றிக்காக ருத்ரதாண்டவம் ஆடுவதுண்டு.

இந் நிலையில் சென்னை மாநகராட்சியின் 110, 131 ஆகிய வார்டுகளுக்கு வருகிற 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் களத்தில்குதித்துள்ளனர். இப்போதே இரு தரப்பினருக்கும் இடையே முட்டல், மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. தேர்தல் நாளில் என்ன நடக்குமோஎன அப் பகுதி மக்கள் மிரண்டு போயுள்ளனர்.

இந் நிலையில் வட சென்னை திமுக எம்.பி. செ.குப்புசாமி தலைமையில் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் குழுவினர் ஆளுனர் பர்னாலாவைசந்தித்து ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

அதில், கடந்த 2001ம் ஆண்டு அக்டோபரில் சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் தேர்தலில் பெருமளவு வன்முறைச்சம்பவங்கள் நடந்தன. வன்முறையை திட்டமிட்டு நடத்தியது அதிமுகவினர் தான். அதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தந்தனர்.

அதேபோல, 2004ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடந்த 2 வார்டுகளுக்கான இடைத் தேர்தலிலும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதிநடந்த வார்டு இடைத் தேர்தலிலும் பயங்கரமான வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. இந்த சம்பவங்களின்போது போலீஸார் தங்களதுகடமையிலிருந்து தவறினர்.

இந் நிலையில் வரும் 19ம் தேதி சென்னை மாநகராட்சியின் 110, 131 ஆகிய இரு வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதிலும் அரசும் அதிமுகவினரும் சேர்ந்து வன்முறைகளை நடத்தலாம் என அஞ்சுகிறோம்.

எனவே, தமிழக போலீஸாருக்குப் பதில் மத்திய ரிசர்வ் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். வாக்குப் பதிவைவீடியோ படம் எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை திமுக கவுன்சிலர்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளனர்.

இடைத் தேர்தல் அமைதியாகவும், ஜனநாயகரீதியிலும் நடந்தேற வசதியாக, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாநில தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு திமுகவினர் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X