பஸ் எரிப்பு: மாணவிகள் சாட்சியம் - அதிமுகவினரை அடையாளம் காட்டினர்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், அந்த பஸ்சில் பயணம் செய்து காயத்துடன் தப்பிய மாணவிகள் இன்று சாட்சியம் அளித்தனர்.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், ஜெயலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததைத் தொடர்ந்துஅதிமுகவினர் வன்முறையில் இறங்கினர். அதில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணம் செய்த பேருந்துதர்மபுரி அருகே தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிருடன் எரிந்து பிணமாகினர்.

இந்த வழக்கு தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில்ஏற்கனவே பேராசிரியைகள், பஸ் டிரைவர், க்ளீனர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். பேருந்தின் மீது பெட்ரோல் ஊற்றிய, தீவைத்த அதிமுகவினரை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 31 அதிமுகவினரும்ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் சம்பவம் நடந்தபோது பஸ்சில் பயணம் செய்த மாணவிகள், காயமடைந்து உயிர் தப்பியமாணவிகள் நீதிபதி கிருஷ்ணராஜாவிடம் சாட்சியம் அளித்தனர்.

இந்த சம்பவத்தின் போது, தீக்காயமடைந்த ப்ரீத்தா என்ற மாணவி நீதிபதி கிருஷ்ணராஜாவிடம் கண்ணீருடன் சாட்சியம்அளித்தார். பேருந்தின் மீது பெட்ரோல் ஊற்றிய மிருகமான, மாது என்ற ரவிக்குமாரை கதறி அழுதபடி அடையாளம் காட்டினார்.

பஸ்சில் தீப் பிடித்தவுடன் தான் தப்பித்து ஓடியபோது தனது இரு பாதங்களிலும் தீக்காயம் ஏற்பட்டதாக அழுதபடியே மாணவிப்ரீத்தா கூறினார். ப்ரீத்தா சாட்சியம் அளித்த பின்னர் அவரிடம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.

இந்த வழக்கில் நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+