சிறுமிகளிடம் செக்ஸ் வக்கிரம்: ராதாகிருஷ்ணனுக்கு உதவிய திக பிரமுகர்!!
வாணியம்பாடி:
![]() |
சிறுமிகளிடம் செக்ஸ் வைத்து கொடுமை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிக்கு உதவியாக இருந்த திராவிடர் கழகப் பிரமுகரிடம் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
வக்கிரம் பிடித்த கஸ்டம்ஸ் அதிகாரி மீது குண்டர் சட்டம் பாயும் என்று தெரிகிறது.
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை தானும் அனுபவித்ததோடு, கப்பல் மாலுமிகள், நண்பர்களுக்கும் விருந்தாக்கி, அவர்களை ஆபாசப் படம்எடுத்து வைத்து கைதாகியுள்ளார் கஸ்டம்ஸ் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரி ராதாகிருஷ்ணன்.
இவர் மீது மனைவி கோமளவல்லியும், ஆனந்தி என்ற சிறுமியும் புகார் சொன்னதையடுத்து இவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இதையடுத்து இந்த நால்வரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் திக பிரமுகரான துரை ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை சென்னைக்குக் கொண்டு சென்று போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனின் வாணியம்பாடி சங்கிலிகுப்பம் கிராம பண்ணை வீடு இப்போதுபோலீசாரின் பிடியில் உள்ளது. இங்கிருந்து ஏராளமான ஆணுறைள், ஆபாச சிடிக்கள், வீடியோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குண்டர் சட்டம்?:
இதற்கிடையே ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.













Click it and Unblock the Notifications