நடராஜன் மீதான கார் இறக்குமதி மோசடி வழக்கு: 3 மாதத்தில் முடிக்க சிபிஐக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடராஜன் மீதான அன்னியச் செலாவணி மோசடி வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 வருடங்களுக்கு முன் ரூ.1 கோடி மதிப்புள்ள லெக்ஸஸ் டொயோட்டா சொகுசு கார், லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.சசிகலாவின் கணவர் நடராஜனுக்காக இந்த கார் இறக்குமதியானது. இதை பழைய கார் என்பது போல போலி ஆவணங்கள் தயாரித்துசுங்கத் துறையை ஏமாற்றி இறக்குமதி செய்தனர். இதையடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன், லண்டனில் வசித்த பாலகிருஷ்ணன், அவரது மகன்யோகேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளும் முடக்கி வைக்கப்பட்டன.

லண்டனில் யோகேஷ் பாலகிருஷ்ணன் இந்த காரை ஒரு வருடமாக பயன்படுத்தியதாக சுங்கத்துறையிடம் தெரிவித்திருந்தனர். ஆனால்,அது பொய்யான தகவல் என்று கூறப்பட்டது.

இவர்களில் பாலகிருஷ்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் முடக்கி வைக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரி, யோகேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம் மனு நீதிபதி சிங்காரவேலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது என்று சிபிஐ தரப்புவழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.

அதற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதால் விசாரணை தாமதமாகிறது என்று சிபிஐ தரப்புவழக்கறிஞர் கூறினார்.

இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன் மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்கும்படியும், இந்த வழக்குவிசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கும் படியும் சிபிஐ நீதிமன்றத்திற்கு நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+