அம்பேத்கர், தேவர் சிலைகளுக்கு கம்பி வேலி ஏன்?: ஜெ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஜாதிக் கலவரமே நடக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், தமிழகத்தில் பல இடங்களில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது மிகவும்பெருமையாகவே உள்ளது. ஆனால், அவரது சிலைக்கு கம்பி வேலி போட்டு அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது போல்வைத்திருக்கிறார்கள். அது ஏன் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதிக் கலவரமே நடக்காமல் அமைதிப் பூங்காவாகதிகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த கம்பி வலைகள்தான்.

அம்பேத்கரின் சிலைக்கு யாராவது விஷமிகள் திடீரென செருப்பு மாலை போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அப்போதெல்லாம் ஜாதிக்கலவரம் வெடிக்கும். அதே போல முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு யாராவது விஷமிகள் செருப்பு மாலை போட்டால், அப்போதும்ஜாதிக் கலவரம் வெடித்து வந்தது.

இதைத் தடுக்க நான் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினேன். அப்போது, எந்த நேரத்தில் யார் செருப்பு மாலைபோடுகிறார்கள் என்பதே தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள், அதை கண்காணிப்பதும் கடினம் என்பதால், சிலைகளைச் சுற்றி கம்பிவேலி அமைக்கலாம் என யோசனை கூறினார்கள்.

இதனால் தான் தலைவர்கள் சிலையை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார்ஜெயலலிதா.

வெள்ளைய தேவருக்கு நினைவுச் சின்னம்:

இதைத் தொடர்ந்து பார்வர்டு பிளாக் உறுப்பினர் சந்தானம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு படைத் தளபதியாகவிளங்கியவர் வெள்ளைய தேவர். அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வெள்ளைய தேவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+