மீனாட்சி கோவிலில் குண்டு வைத்தவர் யார்?: கிராபிக்ஸ் மூலம் படம் வரைந்து தேடுதல் வேட்டை
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்க கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்துஅதன் அடிப்படையில், தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசல் அருகே உள்ள செருப்புகள் பாதுகாக்கும் இடத்தில் வெடிகுண்டுகளைபோலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.
சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது மதுரையில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவிலில் பணியாற்றி வரும் 4 தற்காலிக பணியாளர்களிடம் போலீஸார்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செருப்புகள் பாதுகாக்கும் இடத்தை நிர்வகித்து வரும் துரைப்பாண்டி மற்றும் அவரது மகள் கவிதா ஆகியோரிடம் போலீஸார்தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, செருப்புகளை விட வந்த ஒருவர்தான், வெடிகுண்டுகள் இருந்த பையைக் கொடுத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறிச்சென்றதாக துரைப்பாண்டியின் மகள் கவிதா கூறியுள்ளார். மேலும், அந்தப் பையைக் கொடுத்தவரை தன்னாள் நன்றாகஅடையாளம் காட்ட முடியும் என்றும் கவிதா கூறியுள்ளார்.
கவிதா கூறியுள்ள தகவல்களின் அடிப்படையில், அந்த மர்ம நபரின் உருவம் கம்ப்யூட்டர் உதவியுடன் வரையப்பட்டுள்ளது.அந்த வரை படத்தின் அடிப்படையில் குண்டு வைத்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications