இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னை அருகே உத்தண்டியில் பாஜகவின் சிந்தனையாளர் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்வெங்கையா நாயுடு, மூத்த தலைவர்களான பண்டாரு தத்தாத்ரேயா, பிரேமாத் மகாஜன், எஸ்.திருநாவுக்கரசர், இல.கணேசன்,தமிழக தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலே நெருங்கி வருகிறது. இந்தநிலையில் இடைத் தேர்தலுக்காக எங்களது சக்தியை வீணடிக்க விரும்பவில்லை.

2006ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலை அரை இறுதிப் போட்டியாக நினைக்க வேண்டும். 2011ம் ஆண்டுதேர்தலை இறுதிப் போட்டியாக நினைத்து செயல்பட வேண்டும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி, புதுமுகங்களுக்கு அதிக உற்சாகம்,ஆதரவு தர வேண்டும்.

234 தொகுதிகளிலும் இளையவர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து போட்டியிட வைக்க வேண்டும்.

பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது தலைமையில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்றார் வெங்கையா நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+