ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை:
காமவெறியன் ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து தனது செக்ஸ் வெறியைத் தீர்த்துக் கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளராதாகிருஷ்ணன் குறித்து நாள்தோறும் பரபரப்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையடுத்து போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர்மங்கையர்க்கரசி சூளைமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் தற்போது ராதாகிருஷ்ணன் மீது இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆகியோரைத்தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறி 234, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆண்மை பரிசோதனை:
இதற்கிடையே, ராதாகிருஷ்ணனுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் நாளை (திங்கள்கிழமை) ஆண்மைப்பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
ராதாகிருஷ்ணனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே போலீஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல, ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆனந்தி உள்ளிட்ட சில சிறுமிகளுக்கும் அரசு மருத்துவமனையில்பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications