For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாப்பாபட்டி தேர்தல் மே 27க்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு 19ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் மே 27ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவி தலித் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தங்களது தலைவராக ஒரு தலித் வருவதாஎன்று கூறி பிற சமூகத்தினர் தேர்தலை நடத்த விடாமல் பல்வேறு வழிகளில் இடையூறு செய்து வருகிறார்கள்.

பலமுறை தேர்தல் அறிவிக்கப்பட்டும் ஒரு முறை கூட உருப்படியாக நடைபெறவில்லை. அப்படியே நடந்தாலும்,தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த நாளே தனது பதவியை ராஜினாமா செய்து விடுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், வருகிற 19ம் தேதி இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊர் மக்கள் சார்பில் பெரிய கருப்பன் என்பவரும்,விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நரசிங்கம் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நரசிங்கம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து அங்கு தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாகதேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் மே 27 ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 9ம் தேதி தொடங்கும். 16ம் தேதி வரை மனு தாக்கல் செய்யாலம். 17ம் தேதி மனுக்கள்பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 19ம் தேதி கடைசி நாளாகும். போட்டி இருந்தால் 27ம் தேதி வாக்குப் பதிவுநடத்தப்படும். முடிவுகள் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.

மற்ற இரண்டு தலித் பஞ்சாயத்துகளில் கீரிப்பட்டியில் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் நாட்டாமங்கலத்தில் யாரும்போட்டியிடாததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X