திருச்சி அருகே இரட்டைக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே இரண்டு பேர் வெட்டிக் காலை செய்யப்பட்டு 100 அடி ஆழ கல் குவாரியில் வீசப்பட்டனர். அவர்களதுஉடல்களை தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
அவர்களது வீட்டுக்கு நேற்று ஒரு கும்பல் வந்தது. வீட்டுக்குள் புகுந்து கமருதீன் மற்றும் சாந்தியை சரமாரியாகத் தாக்கியதில்சாந்தியும், கமருதீனும் இறந்தனர்.
பின்னர் இருவரது உடல்களையும் அருகே உள்ள 100 அடி ஆழ கல் குவாரியில் தூக்கி வீசி விட்டு அக்கும்பல் தப்பி விட்டது.
தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். தீயணைப்புப் படையினர்நீண்ட நேரம் போராடி இரு உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
துவாக்குடி பகுதியில் கடந்த 6 மாதங்களில் நடந்துள்ள 3வது இரட்டைக் கொலை இது என்பதால் துவாக்குடி மக்கள் பெரும்பீதியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications