மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி: டி.ராஜேந்தர்
மதுரை:
எங்களது கட்சிக்கும், எங்களுக்கும் மரியாதை கொடுக்கும் கட்சியுடன் சட்டசபை இடைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளஇலட்சிய திமுக தயார் என்று அக்கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் ராஜேந்தர் பேசுகையில், தீவிர அரசியலில் நான் தற்போது ஈடுபட்டுள்ளேன். திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற்காகப் பிறந்ததுதான் லட்சிய திமுக.
திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் தயாராகவே உள்ளோம்.
திமுக தனது தனித்தன்மையை, அடையாளத்தை இழந்து விட்டது. திமுக நடத்தி வரும் மண்டல மாநாடுகளைப் பார்க்கும்போது,அது திமுக மாநாடா அல்லது கூட்டணிக் கட்சிகளின் மாநாடா என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.
ஆனால் அதிமுகவின் நிலை அப்படியில்லை. தனியாக இருந்தாலும் சக்தி வாய்ந்த கட்சியாக விளங்குகிறது அதிமுக.
என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு, திமுகவில் இரண்டாவது முறை போய்ச் சேர்ந்ததுதான். ஆனால் அந்தத் தவறுமீண்டும் நடக்காது. திமுகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் நான் சாணக்கியனாக இருப்பேன்.
கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஒரு காலத்தில் அவரை எனது தலைவராக ஏற்றுக் கொண்டவன்.கொள்கை ரீதியாக அவரை எதிர்ப்பது வேறு, களத்தில் இறங்குவது வேறு. எனவே கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடமாட்டேன் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications