பாலகுருசாமிக்கு பதவி நீட்டிப்பு இல்லை!
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக மீண்டும் பால குருசாமியை நியமிப்பதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநரும்,பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.எஸ்.பர்னாலா நிராகரித்து விட்டார்.
புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட 3 பேர் குழு, பாலகுருசாமி, பாலகிருஷ்ணா, ஏ.எம்.நடராஜன்ஆகியோரது பெயர்களைக் கொண்ட பரிந்துரைப் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பியது. மேலும், பாலகுருசாமிக்கு பதவிநீட்டிப்புத் தரலாம் என்று ஆளுநருக்கு அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாலகுருசாமியின் பெயர் இடம் பெற்றுள்ள பட்டியலைஆளுநர் நிராகத்து விட்டதாகவும், புதிய பட்டியலை வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலகுருசாமிக்கு பதவி நீட்டிப்பு தர வேண்டும் என்ற பரிந்துரையையும் ஆளுநர் நிராகரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications