காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம்குமார் திடீர் மாற்றம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று சில போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி சங்கரராமன் கொலை வழக்கைவிசாரித்து வரும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.பிரேம்குமார், சென்னை சிஐடி குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக இருந்த நசிமுதீன், சென்னை சி.ஐ.டி.சி.சி.ஐ.டபிள்யூ.பிரிவு எஸ்.பி.யாகமாற்றப்பட்டுள்ளார்.மதுரையில் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றி வரும் கிருஷ்ணபிள்ளை, நாமக்கல் மாவட்டஎஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயராம், தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி ஜெயேந்திரர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவில் எஸ்.பி.பிரேம்குமார் பற்றி கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதை தனியாக எழுத்து மூலம் மனுவாக அளிக்கும்படி நீதிபதிகள் கூறினர். இந் நிலையில் பிரேம்குமார் மாற்றப்பட்டுள்ளதுபல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications