சந்திரமுகி திருட்டு விசிடி பிடிபட்டது!
சென்னை:
சென்னையில் சந்திரமுகி படத்தின் 240 திருட்டு விசிடிக்கள் உள்பட நூற்றுக்கணக்கான புதிய படங்களின் திருட்டு விசிடிக்களைப்போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.
புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் பட திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன. சந்திரமுகிபடத்தின் 240 திருட்டு விசிடிக்களை போலீஸார் கைப்பற்றினர்.
திருட்டு விசிடிக்களை தயாரித்து புழக்கத்தில் விடத் திட்டமிட்டிருந்த ஷமீம் அன்சாரி மற்றும் ஆரூண் ஆகியோரை போலீஸார்கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல்செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications