நடைபயணத்தில் காங். தொண்டர்கள் மோதல்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரஹ பவள விழாவையொட்டி நடைபெற்று வரும் காங்கிரஸ் தொண்டர்களின் நடைபயணத்தில்வந்தவர்களை வரவேற்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜி.கே.வாசன், இளங்கோவன், மணிசங்கர அய்யர் ஆகியோரதுஆதரவு தொண்டர்களிடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது.

தண்டி உப்பு சத்தியாகிரஹ போராட்டத்தைப் போல திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு மூதறிஞர் ராஜாஜி தலைமையில்நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பவள விழாவையொட்டி கடந்த 13ம் தேதி திருச்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபயணம் தொடங்கியது.காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணம் தஞ்சை மாவட்டத்தை வந்தடைந்தது. இதையடுத்து நடைபயணமாக வந்தவர்களுக்கு வரவேற்பு கொடுக்ககாங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கூடியிருந்தனர்.

அப்போது ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்குஇடையே கைகலப்பு ஏற்பட்டது. நடைபயணமாக வந்தவர்களுக்கு சால்வை அணிவிப்பதற்கு ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டுமுந்தியதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.

உப்பு சத்தியாக்கிரஹ பவள விழா நினைவு நடைபயணத்தின்போது கோஷ்டிப் பூசல் ஏற்பட்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள்காங்கிரஸ் கட்சியின் நிலையை எண்ணி வேதனை அடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+