ஈரானில் விமானம் தீப்பிடித்து 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெஹ்ரான்:
ஈரானில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தீப்பிடித்ததில் 50க்கும் மேற்பட்ட பயணிகள்பலியானார்கள்.
இதனால் ஓடுதளத்தில் தாறுமாறாக அந்த விமானம் பறந்தது. அப்போது திடீரென விமானத்தில் தீப்பிடித்தது. இதனால்விமானத்தில் இருந்த பயணிகள் அலறினார்கள்.விமானத்தின் அவசர கால பாதுகாப்பு கதவும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால்சில பயணிகள் விமானத்திலிருந்து ஜன்னலை உடைத்து கீழே குதித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த விமானம் தரையில் முட்டி நின்றது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications