சந்திரிகா அரசுக்கு கூட்டணி கட்சி மிரட்டல்
கொழும்பு:
இலங்கையில் சந்திரிகா அரசுக்கான ஆதரவைவாபஸ் பெறுவோம் என்று முக்கிய கூட்டணி கட்சியான ஜேவிபி மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் சந்திரிகா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பம் முதலே ஜேவிபி கட்சி எதிர்த்து வருகிறது. கடந்த தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்ற ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா ஆட்சியைப் பிடித்தார்.
இதனால் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நிதி திரட்டியது. பல வெளிநாடுகளும் நிதியுதவி வழங்க முன் வந்தன. இதனை விரும்பாத இலங்கை அரசு புலிகளுடன் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்தி அதில் புலிகளுடன் இணைந்து ஒரு குழுவை ஏற்படுத்தி,
அதில் புலிகளின் மேற்பார்வையில் அவர்களுடைய பகுதிகளில் நிவாரண உதவி வழங்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு ஜேவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
புலிகளுடன் இணைந்து வெளிநாட்டு நிதியை வழங்கினால் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று ஜேவிபி எச்சரித்துள்ளது. இதனால் சந்திரிகா அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications