For Quick Alerts
For Daily Alerts
Just In
மறியல்: அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை
திண்டிவனம்:
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர்களே சாலை மறியலில் இறங்கியது கண்டனத்துக்குரியதாகும். அவர்களைஉடனடியாக முதல்வர் ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சாலை மறியலில் ஈடுபட்ட 11 அமைச்சர்களும் தாங்களாகவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லதுஅவர்களை முதல்வர் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த 11 அமைச்சர்களும் இடைத் தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குள் நுழைய தடை விதிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த 11 பேரும் சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டு, சாலை மறியல் செய்துகைதாகியிருக்கிறார்கள். இவர்களை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறினார் ராமதாஸ்.
Comments
Story first published: Thursday, April 21, 2005, 5:30 [IST]