For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் ரயில்கள் மோதல்: 20 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை, நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 20பேர்பலியானார்கள். இந்த விபத்திற்கு ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவே காரணம் என்று தெரியவந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.20மணியளவில் குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்தில் உள்ள சால்வியா என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது.

இந்த ரயில் வந்து கொண்டிருந்த அதே பாதையில் ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் சரக்குரயில் நின்று கொண்டிருந்தது எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவருக்கு தெரியவில்லை. இதனால் நின்று கொண்டிருந்த அந்த சரக்குரயிலுடன் சபர்மதி எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் என்ஜினுக்கு அடுத்ததாக இருந்த சபர்மதி எக்ஸ்பிரஸின் 7 பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர், அவரது உதவியாளர் உட்பட 20பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தில்மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள்அனைவரும் வதோரா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரஸாத், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில அமைச்சர்கள்ரயில்வே உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்த விபத்து குறித்து குஜராத் முதல்வர் மோடி கூறுகையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.விபத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வதோரா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற பயணிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

ஊழியர்களின் கவனக்குறைவு:

விபத்து குறித்து ரயில்வே போர்டு தலைவர் எஸ்.கே.சிங் கூறுகையில், விபத்தில் 15 பயணிகள் இறந்திருக்கலாம் என்றார்.

இதற்கிடையே இந்த விபத்துக்கு ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதற்குகாரணமான 2 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் லாலுஅறிவித்துள்ளார்.

விபத்து குறித்து தகவல்களை அறிய அகமதாபாத்தில் 079- 22112503 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X