For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: அரவாணிகள் அட்டகாசத்தால் திணறும் போலீஸார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் ரெளடிகளைப் போல மாமூல் வசூலிக்கும் அரவாணிகளால் போலீஸாருக்கு புதிய தொல்லை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கத்தியைக் காட்டி கடைகளில் மாமூல் கேட்கும் ரெளடிகளின் தொல்லைமிக அதிகமாக இருந்தது. போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளால் தற்போது ரெளடிகளின் தொல்லை ஓரளவு கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது ரெளடிகளின் இடத்தை அரவாணிகள் பிடித்து விட்டார்கள். இவர்கள் 4 அல்லது 5 பேர் கூட்டமாக சென்று கடைகளில்மாமூல் கேட்கிறார்கள். குறைந்தது 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை கடைகளைப் பொறுத்து மாமூல் கொடுக்க வேண்டும்.

கொடுக்க மறுத்தால் கடைக்காரரை சுற்றி நின்று கொண்டு கைதட்டி, கிண்டல் செய்து கடும் தொல்லை கொடுப்பார்கள். இந்ததொல்லைகளை தாங்க முடியாமல் கடைக்காரர்களும் வேறுவழியில்லாமல் கேட்கிற பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.

10 ரூபாய்க்கு குறைவாக கொடுத்தால் அவ்வளவு தான். அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டு கடைக்காரரை மிரட்டவும்செய்வார்கள்.

இதுகுறித்து போலீஸாருக்கு பல புகார்கள் செல்கின்ற போதிலும் அரவாணிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்றுதெரியாமல் போலீஸார் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை கைது செய்து லாக்கப்பிலும் வைக்க முடியாது. சிறையிலும் அடைக்கமுடியாது. ஆண்கள் சிறையிலோ, பெண்கள்சிறையிலோ அடைக்க முடியாது. இவர்களுக்காக சிறையில் தனியாக ஒரு பிரிவு தொடங்கினால் தான் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க முடியும் என்று போலீஸார் கூறுகின்றனர்.

சென்னையில் இப்போது வேகமாக பரவிவரும் அரவாணிகளின் அட்டகாசம் போலீஸாருக்கு புதிய தலைவலியைஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X