இடைத் தேர்தல்: ஆளுநருக்கு அன்பழகன் தந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் முறைகேடுகளை செய்யும் முகமாக, திமுக செயலாளர்கள், தொண்டர்கள்மீது அதிமுக அரசின் தூண்டுதலின் பேரில் போலீஸார் பொய் வழக்குப் போட்டு வருவதாக ஆளுநர் பர்னாலாவுக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவசர தந்தி அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அன்பழகன் அனுப்பிய தந்தியில், சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் நடத்தியதைப் போலவே சட்டசபைஇடைத் தேர்தலிலும் அராஜகத்தில் ஈடுபட அதிமுக அரசு முயலுகிறது.

அதற்காக, திமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் மீது அதிமுக அரசின்தூண்டுதலின் பேரில் போலீஸார் பொய் வழக்குப் போட்டு வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசன் வீட்டில் அத்துமீறி போலீஸார் நுழைந்து அவரைமிரட்டியிருக்கிறார்கள்.

எனவே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை ஆளுநர் எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார் அன்பழகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+