திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக சதி: கருணாநிதி
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு போலீஸ் உதவியுடன்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசனின் வீட்டில் நள்ளிரவில் புகுந்து அடாவடி செய்துள்ளனர்காவல்துறையினர்.
தேர்தல் நேரங்களில் விதிமுறைகளை மீறுவது இந்த எதேச்சாதிகார அரசின் வழக்கம்தான். இந்த இடைத் தேர்தலிலும் அதைகாட்டத்தான் போகிறார்கள்.
ஆனால் அவர்களது அராஜகத்தை எதிர்கொள்ள எங்களது அணி தயங்காது. தற்காலிகமாக ஆட்சி அவர்களது கையில்இருக்கிறது என்ற மமதையில் எப்படியும் நடக்கலாம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அது தவறு என்பதை திமுகஅணியினர் தங்களது உறுதியின் வாயிலாகவும், ஒற்றுமையின் வாயிலாகவும் மெய்ப்பித்துக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications