ஜகார்த்தா: மன்மோகன் சிங்-முஷாரப் சந்திப்பு
ஜகார்த்தா:
ஆசிய ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜகார்த்தா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு முஷாரப்பை சந்தித்தார்.
ஆசிய ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இந்தோனேஷியா சென்றுள்ளார். இந்தமாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் தலைவர்கள் ஜகார்த்தா வந்துள்ளனர்.
அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினர். கடந்த வாரம் தான் முஷாரப் இந்தியா வந்திருந்தார். குறுகிய கால இடைவெளிக்குள்இருவரும் மீண்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமித் கர்ஸாய் மற்றும் நேபாள மன்னர் ஞானேந்திராஆகியோரை சந்தித்து இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்.
இன்று நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்கஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம். காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஒத்துழைப்புகொடுப்பது மிகுந்த மகிழ்சியளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications