ஜப்பான்: ரயில் விபத்தில் 49 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
![]() |
ஜப்பானில் இன்று ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் 49 பயணிகள் பலியானார்கள். 340 பேர் படுகாயமடைந்தனர்.
ஜப்பானிலுள்ள அமகசாகி நகரத்திற்கு அருகே இன்று காலை ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 580பயணிகள் இருந்தனர். திடீரென இந்த ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவம் நடந்தஇடத்திற்கு அந்நாட்டு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 14 ஆண்டுகளில் நடந்துள்ள மிகப்பெரிய ரயில் விபத்து இது என்று கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications