தமிழகம் முழுவதும் வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இடையூறாக இருப்பவர்களைக் கைது செய்ய வேண்டும், அத்தேர்தலில்போட்டியிட்டு மர்மமான முறையில் இறந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் குடும்பத்திற்கு.

ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள்சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் மர்மமான முறையில்மரணமடைந்தார். இதையடுத்து அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நரசிங்கம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.

சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள்,பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு இடையூறாக இருப்பவர்களைக் கைது செய்ய வேண்டும்,

அத்தேர்தலில் போட்டியிட்டு மர்மமான முறையில் இறந்த விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும், இந்த ஊராட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமாசெய்ய அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+