For Quick Alerts
For Daily Alerts
Just In
பயணிகள் கூட்டத்தில் புகுந்த கார்: 2 பேர் பலி
சென்னை:
சென்னை பல்லாவரத்தில், பயணிகள் கூட்டத்தில் புகுந்து, தாறுமாறாக ஓடிய கார், 2 பேரின் உயிரை பலி வாங்கியது.
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். போக்குவரத்துத் துறையில் பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புஷ்பராணி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சத்துணவுமேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
அந்த சமயத்தில் தாம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கிய அந்தக் கார், பயணிகள்கூட்டத்தில் புகுந்தது.
இதில், புஷ்பராணி, கல் குவாரி தொழிலாளி சின்னம்மாள் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.இவர்களில் கோபால் என்பவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
இது தொடர்பாக கார் டிரைவர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Tuesday, April 26, 2005, 5:30 [IST]