பயணிகள் கூட்டத்தில் புகுந்த கார்: 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பல்லாவரத்தில், பயணிகள் கூட்டத்தில் புகுந்து, தாறுமாறாக ஓடிய கார், 2 பேரின் உயிரை பலி வாங்கியது.

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். போக்குவரத்துத் துறையில் பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி புஷ்பராணி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் சத்துணவுமேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

விடுமுறைக்கு பல்லாவரம் வந்திருந்த புஷ்பராணி, பின்னர் ஊருக்கு செல்வதற்காக பல்லாவரம் பஸ் நிலையத்தில் மகன்இதயக்குமாருடன் காத்திருந்தார். அவரைப் போல ஏராளமான பயணிகள் அங்கு நின்றிருந்தனர்.

அந்த சமயத்தில் தாம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கிய அந்தக் கார், பயணிகள்கூட்டத்தில் புகுந்தது.

இதில், புஷ்பராணி, கல் குவாரி தொழிலாளி சின்னம்மாள் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.இவர்களில் கோபால் என்பவர் உயிருக்குப் போராடி வருகிறார்.

இது தொடர்பாக கார் டிரைவர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+