For Daily Alerts
Just In
ஜப்பான்: ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 75 ஆனது
டோக்கியோ:
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.
ஜப்பானிலுள்ள அமகசாகி நகரத்திற்கு அருகே நேற்று காலை ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 580பயணிகள் இருந்தனர். திடீரென இந்த ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த கட்டிடத்தில் மோதி கவிழந்தது.
இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி அந்தப் பெட்டிகளில் இருந்த 75 பயணிகள் இறந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
அனுபவம் இல்லதை டிரைவர் ரயிலை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் கடந்த 14 ஆண்டுகளில் நடந்துள்ள மிகப்பெரிய ரயில் விபத்து இது என்று கூறப்படுகிறது.
Story first published: Thursday, July 17, 2008, 15:44 [IST]