குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க ராஜ்யசபாவில் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
திருக்குறளை மத்திய அரசு தேசிய இலக்கியமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக, திமுக, காங்கிரஸ்உறுப்பினர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதிமுக உறுப்பினர் பி.ஜி.நாராயணன்பேசுகையில், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
எனவே திருக்குறளை தேசிய இலக்கியமாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கருத்தை ஆதரித்து திமுகவின் சண்முக சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications