For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க ராஜ்யசபாவில் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

புதுடெல்லி:

திருக்குறளை மத்திய அரசு தேசிய இலக்கியமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக, திமுக, காங்கிரஸ்உறுப்பினர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதிமுக உறுப்பினர் பி.ஜி.நாராயணன்பேசுகையில், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

உலக அளவில் திருக்குரான், விவிலியம் (பைபிள்) ஆகியவற்றுக்கு அடுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் மட்டும்தான்.

எனவே திருக்குறளை தேசிய இலக்கியமாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவரது கருத்தை ஆதரித்து திமுகவின் சண்முக சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X