மதானி: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்குஉச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிகிச்சை பெறுவதற்கு வசதியாக எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மதானியின் மனைவியும் தனதுகணவரை விடுதலை செய்யக் கோரி ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்வு) மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதிகள் தர்மாதிகாரி, கிருஷ்ணா ஆகியோர், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறுகூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications