கட்டண பாக்கி: மாணவர்களை சிறை வைத்த பள்ளி நிர்வாகம்!
மதுரை:
ரூ. 1.5 லட்சம் கட்டணப் பாக்கியை செலுத்தாததால் 2 மாணவர்களை பள்ளியில் சிறை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில்,சம்பந்தப்பட்ட 2 மாணவர்கைளயும் விடுவிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் சாஸ்திர நகரைச் சேர்ந்தவர் எபனேசர் பிரபு. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ஹேபியஸ் கார்பஸ் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், எனக்கு டேவிட் கிறிஸ்டோபர் (வயது 12), பிரவீண் (வயது 8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் ஆண்டுத் தேர்வு கடந்த 14ம் தேதியுடன் முடிந்தது. அதன் பிறகு பள்ளி விடுமுறை விடப்பட்டது. தேர்வு முடிந்தபின்னர் மாணவர்களை அவர்களது பெற்றோருடன் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைக்கும்.
ஆனால் எங்களது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக எனது மனைவி சென்றபோது பள்ளிக் கட்டணம் ரூ ஒன்றரைலட்சத்தை செலுத்தினால்தான் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியும் என்று பள்ளி தாளாளர் சாம் பாபு கூறி, குழந்தைகளைஅனுப்ப மறுத்து விட்டார்.
இரு குழந்தைகளும் பள்ளியிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனது குழந்தைகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றுஎபனேசர் பிரபு தனதுமனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது சம்பந்தப்பட்ட இரு மாணவர்களையும் கொடைக்கானல் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பள்ளி தாளாளர்சாம் பாபுவும் நேரில் ஆஜரானார்.
சாம்பாபுவின் வழக்கறிஞர் கூறுகையில், குழந்தைகளை பள்ளியில் அடைத்து வைக்கவில்லை. குழந்தைகளின் தாயார்தான்அவர்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று கூறி தகராறு செய்தார். அவர்களை விடுவிப்பதில் எங்களுக்கு எந்தஆட்சேபனையும் இல்லை என்றார்.
இதையடுத்து இரு மாணவர்களையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications