மக்கள் தொகை கட்டுப்பாடு: தமிழகம், பாண்டிச்சேரி முன்னிலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்தியசுகாதரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,

2045ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 180 கோடியைத் தாண்டிவிடும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் தொகையைக்கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2000ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கொள்கையின்படி, 2010ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் 2.1 ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

இந்த இலக்கை தமிழகம், கேரளம், கோவா, நாகாலாந்து, டெல்லி, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார், சண்டிகர், மிசோரம்ஆகிய மாநிலங்கள் இப்போதே எட்டிவிட்டன.

நாட்டில் மலேரியா தாக்குதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மலேரியாவால்தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.84 மில்லியனில் இருந்து 1.74 ஆகக் குறைந்துள்ளது.

அதே போல டெங்கு காய்ச்சல் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அன்புமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+