ஏர்-இந்தியா: அரபு நாடுகளுக்கு குறைந்த கட்டண விமான சேவை தொடக்கம்
திருவனந்தபுரம்:
கேரளாவிலிருந்து அரபு நாடுகளுக்கு முதன் முதலாக குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஏர்-இந்தியா இன்று முதல்துவக்கியது.
பல தனியார் விமான நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை தொடங்கி இருப்பதால் போட்டியைசமாளிப்பதற்காக ஏர்-இந்தியாவும் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்க முடிவு செய்தது. இதற்காக ஏர்-இந்தியாஎக்ஸ்பிரஸ் என்ற பிரிவைத் தொடங்கியுள்ளது.
இதன் முதல் விமானம் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்குப் புறப்பட்டு சென்றது. இந்த குறைந்தகட்டண விமான சேவையை கேரள ஆளுநர் ஆர்.எல்.பாட்டியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.
திருவனந்தபுரம் தவிர கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களில் இருந்தும் இந்த எக்ஸ்பிரஸ் விமான சேவையைஇயக்க ஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications