கேரளா: கருணாகரனின் புதிய கட்சி உதயம்
திருச்சூர்:
கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் கருணாகரன், காங்கிரஸிலிருந்து பிரிந்து இன்று புதிய கட்சியை தொடங்கினார்.
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இதற்கு முன்பு முதல்வராக இருந்தஏ.கே. அந்தோணிக்கும் மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கருணாகரனுக்கும் மோதல்ஏற்பட்டது.
சமீபத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதை தொடர்ந்து கருணாகரனும், அவரது மகன் முரளீதரனும் தங்களுக்குஇருக்கும் ஆதரவை வெளிக்காட்டும் விதத்தில் திருவனந்தபுரம் உள்பட 3 இடங்களில் பேரணி நடத்தினார்கள்.
பேரணி நடத்தக்கூடாது என்ற காங்கிரஸ் மேலிடத்தின் எச்சரிக்கையையும் மீறி இவர்கள் பேரணி நடத்தியதால் முரளீதரன்காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் காங்கிரஸிலிருந்து பிரிந்து புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டார். இதன் படி புதிய கட்சிதொடக்க விழா இன்று திருச்சூரில் நடைபெற்றது.
இன்று பகல் 12.30 மணியளவில் புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இக்கட்சிக்கு தேசிய காங்கிரஸ் (இந்திரா) என்றுபெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் தலைவராக கருணாகரனின் மகன் முரளீதரனே அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய கட்சி தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications