ஆற்றில் மூழ்கி 6 பாண்டிச்சேரி பள்ளி மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்:
கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பாண்டிச்சேரி பள்ளி மாணவர்கள் 6 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
பாண்டிச்சேரியில் பிரைட் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து 30 மாணவர்கள் ஒரு பஸ்சில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.முதலில் தேக்கடி சென்ற அவர்கள் பிறகு அங்கிருந்து பாலா என்ற இடத்திற்கு சென்றனர்.

இங்குள்ள ஒரு ஆற்றில் சில மாணவர்கள் குளித்தனர். இதில் 7 பேர் திடீரென ஆற்றில் மூழ்கினர். இதில் ஒரு மாணவன் தப்பி கரைசேர்ந்தான். மற்ற 6 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைக்கும் படையினர் 6 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications