செஞ்சி: இடி தாக்கி 4 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நேற்று பெய்த கன மழையின்போது இடி தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 4 பேர் இறந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.

செஞ்சி அருகே மொடையூர் என்ற கிராமத்தில் சிலர் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கன மழை பெய்தது. இதையடுத்து வயலில் இருந்த ஒரு கொட்டகைக்குள் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.

இந் நிலையில் பயங்கர இடி ஒன்று அவர்கள் இருந்த கொட்டகையில் விழுந்தது. இதில் ராஜமாணிக்கம், சண்முகம், ஏழுமலை ஆகிய மூன்று பேரும் உடல் கருகி இறந்தனர். 17 பேர் தீக்காயம் அடைந்தனர். இவர்களில் கஸ்தூரி என்பவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோல செஞ்சி அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில், செல்வராணி என்ற 18 வயது பெண் இடி தாக்கி இறந்தார். கம்மந்தார் கிராமத்தில் 2 பேர் காயமடைந்தனர். மொடையூரில் அமுதா என்ற பெண்மணியும் இடி தாக்கி காயமடைந்தார்.

திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+