For Daily Alerts
Just In
குடிசைகளை காப்பாற்றிய விபி சிங்
லக்னெள:
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள நகரில் குடிசைகள் இடிக்கப்படுவதை எதிர்த்து முன்னாள் பிரதமர் விபி சிங் போராட்டத்தில்ஈடுபட்டார். இதையடுத்து குடிசைகள் இடிப்பு நிறுத்தப்பட்டது.
லக்னெள அக்பர் நகர் பகுதியில் அரசு நிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிசைகளை அமைத்துள்ளனர். இந்தக் குடிசைகளைஅகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமரே போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். இதையடுத்துகுடிசைகள் அகற்றும் பணியை உபி அரசு தாற்காலிகமாக கைவிட்டுள்ளனது.
முன்பு டெல்லியிலும் ஏழை மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டபோது விபி சிங் போராட்டத்தில் ஈடுபட்டு அதைத் தடுத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, May 3, 2005, 5:30 [IST]