For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிசைகளை காப்பாற்றிய விபி சிங்

By Staff
Google Oneindia Tamil News

லக்னெள:

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள நகரில் குடிசைகள் இடிக்கப்படுவதை எதிர்த்து முன்னாள் பிரதமர் விபி சிங் போராட்டத்தில்ஈடுபட்டார். இதையடுத்து குடிசைகள் இடிப்பு நிறுத்தப்பட்டது.

லக்னெள அக்பர் நகர் பகுதியில் அரசு நிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிசைகளை அமைத்துள்ளனர். இந்தக் குடிசைகளைஅகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

லக்னொவில் இருந்த சிங் இதையறிந்து, அப் பகுதிக்கு விரைந்து வந்தார். குடிசைப் பகுதியின் முன் அவர் தர்ணா போராட்டத்தில்இறங்கினார். குடிசைகளை இடிக்கும் முன் இந்த மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

முன்னாள் பிரதமரே போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். இதையடுத்துகுடிசைகள் அகற்றும் பணியை உபி அரசு தாற்காலிகமாக கைவிட்டுள்ளனது.

முன்பு டெல்லியிலும் ஏழை மக்களின் குடிசைகள் அகற்றப்பட்டபோது விபி சிங் போராட்டத்தில் ஈடுபட்டு அதைத் தடுத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X