பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
போலீஸார் பிடிக்க வந்ததால் பயந்து போன கைதி பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். திருட்டு வழக்கில் இவரைப்போலீஸார் கைது செய்திருந்தனர். ஆனால், போலீஸ் பிடியிலிருந்து தப்பிய விஜயன் தனது வீட்டில் சென்று பதுங்கியிருந்தார்.
தற்கொலை செய்து கொண்ட விஜயனின் குடும்பத்தினரை சந்தித்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. விளவங்கோடு மணி ஆறுதல்தெரிவித்தார்.
போலீஸாரின் கெடுபிடி காரணமாகவே விஜயன் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications