கே.ஜே. ராவிடம் திமுக புகார் மனு
சென்னை:
இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக பெருமளவில் முறைகேடுகள் செய்யத் திட்டமிட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் அதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் கே.ஜே.ராவிடம் புகார் மனுகொடுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் விடுதலை விரும்பி, இளங்கோவன் ஆகியோர் சிறப்புப் பார்வையாளர் ராவை சந்தித்து இதுதொடர்பாக கொடுத்த மனுவில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து பெருவாரியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.அதேபோன்ற செயலில் ஆளுங்கட்சியினர் இந்தத் தேர்தலிலும் ஈடுபடலாம்.
எனவே வன்முறைச் சம்பவங்களின் மூலம் ஆளுங்கட்சியினர் பலனடைந்து விட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் பணிகளில் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
மனுவில் கூறப்பட்டுள்ள புகார்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதைஆராய்ந்து பார்த்த பின்பே, தமிழகத்தை விட்டு தான் செல்லப் போவதாகவும் ராவ் திமுக குழுவிடம் உறுதிமொழி அளித்தார்.
இதேபோல, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சைரன் பொருத்திய காரில், சுழல் விளக்கு சுழல, துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன்வாக்கு சேகரிக்க வருவதால் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் ஒரு புகாரும் ராவிடம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று காலை திருவள்ளூர் சென்ற ராவ், அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளுடன் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கும்மிடிப்பூண்டிக்கு சென்ற ராவ் அங்கு தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக தோரணங்களையும் வளைவுகளையும் தூக்கச் சொன்னார் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications