கும்மிடிப்பூண்டி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தேர்தல் அதிகாரி பிச்சம்மாள் நேற்று திடீரென மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக பொன்னேரி உதவி கலெக்டர் சிஜிதாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் இத் தொகுதியின் தேர்தல்அதிகாரியாக இருந்த பிச்சம்மாள் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல்அதிகாரியுமான தங்கசுவாமி பிறப்பித்தார்.
பிச்சம்மாள் திடீரென மாற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கப்படவில்லை. இத் தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போதுமாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்யாததால் குழப்படி ஏற்பட்டது.
டெல்லி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தான் இதை கண்டுபிடித்தனர். இதன் காரணமாக பிச்சம்மாள் மாற்றப்பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு மேலும் 3 பாதுகாப்புப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மத்திய ரிசர்வ்படையை சேர்ந்த 250 வீரர்களும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 250 வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.