டி.எஸ்.பியை கண்டுபிடிக்க 19 தனிப்படைகள்!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
காணாமல் போய் விட்ட ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினத்தைக் கண்டுபிடிக்க மேலும் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் எஸ்.பியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் தன்னை டார்ச்சர் செய்ததாக கூறி, தற்கொலை செய்வதாக சொல்லிவிட்டு,தனது ஜீப்பையும் துப்பாக்கியையும் அம்போவென விட்டுவிட்டு காணாமல் போய் விட்டார் டி.எஸ்.பி. மணிரத்தினம்.
இதனால் தான் மாணிக்கவேலுக்கு வேறு போஸ்டிங் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால், மணிரத்தினம்திருமபி வந்த பாடில்லை.
இந் நிலையில் மணிரத்தினத்தைக் கண்டுபிடிக்க மேலும் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளஎஸ்.பி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications