For Quick Alerts
For Daily Alerts
Just In
முகம்மது அலி மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை: சிபிஐ
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில், முன்னாள் டிஐஜி முகம்மது அலி மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும் என சிபிஐ இயக்குனர் யு.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் இதுதொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 48 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
தமிழகத்தில் பதிவாகியுள்ள முத்திரைத் தாள் மோசடி வழக்கில் (முகம்மது அலி உள்ளிட்டோர் மீதான) விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஜெயலட்சுமி விவகாரத்தைப் பொருத்தவரை, மொத்தமாக இதுவரை 6 குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல செய்யப்பட்டுள்ளன.காவல்துறையினர் மீதான ஜெயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்சர்மா.
Comments
Story first published: Monday, May 9, 2005, 5:30 [IST]